சிறுகதை போட்டி - enabled.in

சிறுகதை போட்டி

ன்றைக்கு நம்மில் மாற்றுத்திறனாளிகள் பலர் பல்வேறு சாதனைகளை செய்து புகழ்படைத்துள்ளார்கள். அவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக மதுரையை சேர்ந்த ‘மாற்றுத்திறனாளிகள்  சிறுகதை போட்டி differently abled writer contest‘( அன்னை திறனேற்ற பயிற்சி திண்ணை) என்ற அமைப்பு தமிழ்சிறுகதை ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்துள்ளது.
மாற்று திறனாளிகள் மறுவாழ்வு பற்றிய விழிப்புணர்வு வளரும் நோக்கத்துடன் இந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தலைப்பு -‘இறைவன் கொடுப்பது ஒரு வாழ்வு, மனிதன் கொடுப்பது மறுவாழ்வு’


தேர்வு செய்யப்படும் சிறந்த 3 சிறுகதைகளுக்கு பரிசும், பாராட்டும் வழங்கவுள்ளது இந்த அமைப்பு.

மேலும் இது பற்றிய விபரங்களுக்கு
வி.ஆர்.கணேஷ்.
நிர்வாக இயக்குநர்,
அன்னை திறனேற்ற பயிற்சி திண்ணை.
93441 25161 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இயற்கையாகவே மனிதருக்கு இரங்கும் சிந்தனை கொண்டவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு உஙகள் திறனை வெளிக்கொண்டு வரலாம். எடுங்கள் பேனாவை, எழுதுங்கள் உங்கள் மனவோட்டத்தை…….நன்றி!

Leave a comment

Share Your Thoughts...