தேவராஜனின் வாழ்க்கையை தொடர - enabled.in

தேவராஜனின் வாழ்க்கையை தொடர

devarajan profile imageநான் S.தேவராஜன் (வயது 42), B.Com., பட்டதாரியான நான் சிறு வயது முதலே உழைத்து பிழைத்து வந்ததோடு எனது படிப்பையும் தொடர்ந்து வந்தேன். இந்நிலையில் 1996-ம் ஆண்டு எனது தந்தை காலமானதால் குடும்ப சுமைகளை தாங்க நேரிட்டது. இந்நிலையில் 1999 முதல் நான் பத்திரிகை துறையில் பணியாற்ற தொடங்கினேன். முதலில் தினமலர் நாளிதழில் நிருபராக பணிபுரிந்தேன். பின்னர் தினமணி நாளிதழில் Marketing பிரிவிலும் பின்னர் உதவி ஆசிரியராகவும் பணிபுரிந்தேன்.

இதற்கிடையில் 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து ஒன்றில் எனது வலது காலை இழந்து சர்க்கரை நோயாலும பாதிக்கப்பட்டேன். அதன் தொடர்ச்சி யாக 2013 ஆம் ஆண்டு எனது இரு சிறுநீரகங்கள் பாதிப்படைந்து செயலிழந்தன. அதற்கான பல சிகிச்சை களை மேற்கொண்டும் பலனில்லாமல் போனது. பின்னர் வேறு வழியின்றி Dialysis சிகிச்சை முலம் கடந்த 4 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருகிறேன்.

இருப்பினும் என்னால் எந்த பணியும் செய்ய முடியாத அளவுக்கு உடல் பலமற்று போய்விட்டது. வீட்டிலிருந்தபடியே ஏதாவது பணி செய்யலாம் என முயற்சித்தாலும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 6மாதங்களுக்கு முன்னர் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாத நிலையில் என்னை தனியே தவிக்க விட்டுவிட்டு எல்லோரும் சென்று விட்டனர்.

இல்லானை இல்லாலும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயாரும் வேண்டாள் என்பார்கள் அதுபோல என் தாயாரும் என்னை விட்டு சென்று விட்டார்கள். எந்த வருமானமும் இல்லாத நிலையில் நான் தற்போது சில நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என்னை அறிந்தவர்களிடம் யாசகம் பெற்று உயிர் வாழ்ந்து வருகிறேன் வீட்டுக்கு வாடகை கொடுக்கவும் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமலும் தந்தை என்ற முறையில் எனது மகளின் கல்வி செலவுக்கு கூட ஏதும் உதவ முடியாமலும் வாழ்வா ? சாவா ? என்ற கட்டத்தில் நான் தற்போது இருக்கிறேன்.

இதில் ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் மாதம் 8 முறை எளக்கு Dialysis சிகிச்சை செய்வதற்கான செலவை சென்னை Sri Matha trust நிர்வாகத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இருப்பினும் எனது அடிப்படை தேவைகளுக்கு நான் சிரமப்படும் நிலை நீடிக்கிறது. இந்தநிலையில்தான் எனது நிலை குறித்து இதன்மூலம் தங்களுக்கு தெரிவித்துள்ளேன். எனக்கு தகுந்த வேலையை கொடுத்து எனது மகளின் படிப்பை தொடர வழிவகை செய்ய இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் சகோதரன்
S.தேவராஜன்.
2/23, புத்தபிரான் தெரு. சீனிவாசன் நகர். நாவலூர் போஸ்ட். தாழம்பூர்.
காஞ்சிபுரம் மாவட்டம். சென்னை -600 130.

Phone Number : 9092838780.

 

 

குறிப்பு: இத்தகவல் இங்கு இலவசமாக மற்றும் தேவராஜன் அவர்களுக்கு உதவும் வண்ணம் மட்டுமே  வெளியிடப்பட்டுள்ளது. தொடர்புக்கொள்ள விரும்புவோர் தேவராஜன் அவர்களை நேராடியாக தொடர்பு கொள்ளவும்.

Leave a comment

Share Your Thoughts...