Mental Illness Archives - Page 6 of 8 - enabled.in
வழி காட்டும் திட்டம்

வழி காட்டும் திட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் 32 மாவட்டகளிலும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் நடைமுறைபடுத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஓரு நலப்பணியாளரும்,மற்ற இடங்களில் 6000 மக்கள் தொகை கொண்ட இடங்களில் நலப்பணியாளரும், ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்,மாற்றுத்திறனாளிகளை கண்டறிவதும் அவர்களுக்கு தேவையான சேவைகளை செய்வதும் நலப்பணியாளருக்கும், ஒருங்கிணைப்பாளர்களின் பணிகளாகும்.

திருமண நிதி உதவி ரூ.50 ஆயிரம்

திருமண நிதி உதவி ரூ.50 ஆயிரம்

இளநிலைப் பட்டம் பெற்ற மாற்றுத் திறனாளிகளின் திருமண நிதி உதவியை ரூ 25 ஆயிரத்தில் இருந்து ரூ 50 ஆயிரமாக உயர்த்தியும், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கவும் முதலமை‌ச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Global Telugu Tamil People Foundation

Global Telugu Tamil People Foundation

GTPF strongly believe that in the present scenario of world transformation into Economic Liberalisation and reforms which inturn is likely to spread different cultures among our children. Voluntary organisations like ours have a greater role in taking up the welfare activities, for the upliftment of the down trodden , developmentally delayed and the handicapped and so on. GTPF all along has involved itself in the creation of AIDS Awareness, developing the abilities of physical and mental children so that they earn a better status in society.

தமிழக அரசு – கட்டிட அமைப்பு விதி

தமிழக அரசு – கட்டிட அமைப்பு விதி

அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டமைப்புகளில், மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் வகையில், உடனே மாற்றங்கள் செய்ய, நகராட்சி கட்டட விதிகள், உள்ளாட்சி கட்டட விதிகளில் மாற்றம் செய்யப்படும் . மாற்றுத் திறனாளிகள், பல்வேறு பொதுக் கட்டடங்களுக்குச் செல்லும் போது, அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் களைய, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் தனியார் மற்றும் அரசு கட்டடங்களில், மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கு சாய்வு தளங்கள், லிப்ட் போன்றவை இருக்க வேண்டும். அதன்படி, சாய்வு தளங்கள், கழிப்பறைகள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ப அமைத்தால் தான், கட்டட அனுமதி வழங்கப்படும்.

ஆரம்பநிலை பயிற்சி மையங்கள்

ஆரம்பநிலை பயிற்சி மையங்கள்

மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் 0-6 வயதுடைய 50 மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயன்பெறும் வகையில்,தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. மனவளர்ச்சி பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய பயிற்சிகள் மூலம் அவர்களின் செயல்திறன் அதிகரித்து, அவர்களை நல்வாழ்வு அடையச் செய்வதில் அவர்களின் பெற்றோர்/பாதுகாவலரைப் பயிற்றுவித்தல் மற்றும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி மற்றும் நல்வாழ்வு சேவைகளை அளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

சிறப்பு மருத்துவ முகாம்-கோவை மாவட்டம்

சிறப்பு மருத்துவ முகாம்-கோவை மாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், வரும் 8ம் தேதி கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடக்கிறது. கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட மருத்துவ பணிகள் துறை, மாற்றுத் திறனாளிகளுக்கான நல அலுவலகம், ஸ்ரீ அவிநாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை, கடந்த மாதம் 23ம் தேதியிலிருந்து நடத்தி வருகிறது.

தேசிய அடையாள அட்டை

தேசிய அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல். மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல மையங்கள் மூலமாக வழங்கப்படுகிறது.