மாற்றுத்திறனாளி Archives - Page 3 of 5 - enabled.in
செப். 13-ல் சிறப்பு முகாம் – அரியலூர் மாவட்டம்

செப். 13-ல் சிறப்பு முகாம் – அரியலூர் மாவட்டம்

முகாமில், இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு அந்த அட்டை வழங்கப்படும். தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் உரிய உதவிகள் வழங்கப்படும். இதுவரையில் உதவித்தொகை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மூலம் உதவித்தொகை வழங்கப்படும்.

குடியிருப்பில் 3 விழக்காடு சலுகை

குடியிருப்பில் 3 விழக்காடு சலுகை

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் திட்டங்களின், மனை / வீடு / அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் 1 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 3 விழுக்காடாக உயர்த்தி வழங்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளர்.

பார்வையற்றோர் பயிற்சி மையம்

பார்வையற்றோர் பயிற்சி மையம்

தமிழக அரசின் திட்டம் – பார்வையற்ற குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தீவிர பயிற்சி வழங்கி, பிரெய்ல் எழுத்துக்களை அறிமுகப்படுத்தி அவர்களை சாதாரண பள்ளியில் உள்ளடங்கிய கல்வி பெற தயார்படுத்துதல்.

வழி காட்டும் திட்டம்

வழி காட்டும் திட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் 32 மாவட்டகளிலும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் நடைமுறைபடுத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஓரு நலப்பணியாளரும்,மற்ற இடங்களில் 6000 மக்கள் தொகை கொண்ட இடங்களில் நலப்பணியாளரும், ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்,மாற்றுத்திறனாளிகளை கண்டறிவதும் அவர்களுக்கு தேவையான சேவைகளை செய்வதும் நலப்பணியாளருக்கும், ஒருங்கிணைப்பாளர்களின் பணிகளாகும்.

ஆரம்பநிலை பயிற்சி மையங்கள்

ஆரம்பநிலை பயிற்சி மையங்கள்

மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் 0-6 வயதுடைய 50 மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயன்பெறும் வகையில்,தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. மனவளர்ச்சி பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய பயிற்சிகள் மூலம் அவர்களின் செயல்திறன் அதிகரித்து, அவர்களை நல்வாழ்வு அடையச் செய்வதில் அவர்களின் பெற்றோர்/பாதுகாவலரைப் பயிற்றுவித்தல் மற்றும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி மற்றும் நல்வாழ்வு சேவைகளை அளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆரம்ப மையம்

ஆரம்ப மையம்

பிறந்தது முதல் வளர் பருவகுழந்தை வரை உள்ள செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆரம்பநிலை பாதிப்பைக் கண்டறிந்து அக்குழந்தைகள் 5வது வயது அடைவதற்குள் அவர்களுக்கு மொழி மற்றும் பேச்சு பயிற்சி வழங்கி அவர்களை சாதாரண பள்ளியில் சேர்த்து ஒருங்கிணைக்க வழிவகை செய்கிறது.

தேசிய அடையாள அட்டை

தேசிய அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல். மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல மையங்கள் மூலமாக வழங்கப்படுகிறது.

கல்விக்காக ரூ.39 கோடி ஒதுக்கீடு

கல்விக்காக ரூ.39 கோடி ஒதுக்கீடு

பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் உட்பட பல்வேறு வசதிகளை செய்துதர, நடப்பாண்டில் (2010-2011) 39.03 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பார்வையற்ற, காது கேளாத, வாய் பேசாத, இதர குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இவர்களுக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

மோட்டார் மூன்று சக்கர வண்டிகள்

மோட்டார் மூன்று சக்கர வண்டிகள்

கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவியர்/பணிபுரிவோர்/சுயதொழில் புரிவோருக்கு (இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட இரு கைகளும் நல்ல நிலையில் உள்ள)மோட்டார் பொருத்திய பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வண்டி இலவசமாக வழங்கப்படுகின்றது.

கடன் உதவி

கடன் உதவி

மாற்றுத் திறனாளிகளுக்கு 5லிருந்து 9 சதவிகித வட்டியில் கடனுதவி வழங்குதல். 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்; மாற்றுத் திறனாளிகளாக இருத்தல்வேண்டும்; தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும்.