உதவித் தொகை Archives - enabled.in
திருமண நிதியுதவி – விண்ணப்பங்கள் பெறப்படுகிறது

திருமண நிதியுதவி – விண்ணப்பங்கள் பெறப்படுகிறது

மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்க விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உடல் ஊனமுற்ற நபர்கள், பார்வையற்றவர்கள், காதுகேளாத மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத் திறனாளிகளை திருமணம் புரியும் நல்ல நிலையில் உள்ளவர்களுகுக்கும், மாற்றுத் திறனாளிகளை திருமணம் புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கும் திருமண நிதியுதவித் தொகை 25 ஆயிரம்

வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை

வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகள் எஸ்.டி. பிரிவினர் உள்ளிட்டோருக்கு தகுதியின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, காலாண்டுக்குக்கான உதவித் தொகை செப். 30-ம் தேதிக்குள் வழங்கப்பட உள்ளது.

Cash prize and assistance for Hearing impaired students

Cash prize and assistance for Hearing impaired students

Tamil Nadu government announced cash rewards for such meritorious students in government-run schools in Classes 10 and 12.”From this year onwards, students with speech and hearing disabilities in government-run schools who score the top three state ranks (in 12th Board exams) will be awarded cash prize of Rs 18,000, Rs 12,000

ஆரம்பநிலை பயிற்சி மையங்கள்

ஆரம்பநிலை பயிற்சி மையங்கள்

மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் 0-6 வயதுடைய 50 மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயன்பெறும் வகையில்,தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. மனவளர்ச்சி பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய பயிற்சிகள் மூலம் அவர்களின் செயல்திறன் அதிகரித்து, அவர்களை நல்வாழ்வு அடையச் செய்வதில் அவர்களின் பெற்றோர்/பாதுகாவலரைப் பயிற்றுவித்தல் மற்றும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி மற்றும் நல்வாழ்வு சேவைகளை அளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

கடன் உதவி

கடன் உதவி

மாற்றுத் திறனாளிகளுக்கு 5லிருந்து 9 சதவிகித வட்டியில் கடனுதவி வழங்குதல். 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்; மாற்றுத் திறனாளிகளாக இருத்தல்வேண்டும்; தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும்.

Cash prize and assistance for visually impaired students

Cash prize and assistance for visually impaired students

தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு கீழ்கண்டவாறு சிறப்பு விருது வழங்குதல். இது தவிர தமிழ் நாட்டிற்குள் இவர்களது உயர்கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும்.

சுய வேலைவாய்ப்பு

சுய வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற பரிந்துரை செய்யப்படுகிறது. வங்கிக் கடன் அளித்த பின்னர் அரசு மானியமாக கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது ரூ.3000/- இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படுகிறது.

செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பட்டப் படிப்பு வகுப்புகள்

செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பட்டப் படிப்பு வகுப்புகள்

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை மாநிலக் கல்லூரியில் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வண்ணம் 2007-2008-ஆம் கல்வியாண்டிலிருந்து பி.காம் மற்றும் பி.சி.ஏ. பட்டப் படிப்பு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

Scribe Assistance for visually impairment student

Scribe Assistance for visually impairment student

9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பார்வையற்ற மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வில் வினாக்களுக்கு வாய் மூலம் அளிக்கும் பதிலினை எழுதும் உதவியாளருக்கு ஒரு தேர்வுத் தாளுக்கு ரூ.50/- வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை

மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை

என்ஜினீயரிங், மருத்துவம் மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய அளவில் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை “இந்திய அரசின் தேசிய உடல் ஊனமுற்றோருக்கான நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தால்” 2011- 2012-ம் நிதியாண்டில் தகுதியுள்ள 1000 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதற்காக, தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள மாநில தலைமை கூட்டுறவு வங்கி வழிநடத்தும் அமைப்பாக செயல்படுகிறது. பொறியியல், மருத்துவம் மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தகுதியுள்ள மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.

மருத்துவம் மற்றும் பொறியியல் பட்டப் படிப்புக்கு மாதம் ஒன்றுக்கு பராமரிப்பு உதவித் தொகை ரூ. 2 ஆயிரத்து 500ம், புத்தகம் மற்றும் இதர கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

முதுகலை மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்ட மேற்படிப்புக்கு மாதம் ஒன்றுக்கு பராமரிப்பு உதவித் தொகை ரூ. 3 ஆயிரமும், புத்தகங்கள் மற்றும் இதர கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

கூடுதல் விபரங்களுக்கு www.nhfdc.nic.in என்ற இணைய தள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.