allowances Archives - Page 2 of 4 - enabled.in
பார்வையற்றோர் பயிற்சி மையம்

பார்வையற்றோர் பயிற்சி மையம்

தமிழக அரசின் திட்டம் – பார்வையற்ற குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தீவிர பயிற்சி வழங்கி, பிரெய்ல் எழுத்துக்களை அறிமுகப்படுத்தி அவர்களை சாதாரண பள்ளியில் உள்ளடங்கிய கல்வி பெற தயார்படுத்துதல்.

வழி காட்டும் திட்டம்

வழி காட்டும் திட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் 32 மாவட்டகளிலும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் நடைமுறைபடுத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஓரு நலப்பணியாளரும்,மற்ற இடங்களில் 6000 மக்கள் தொகை கொண்ட இடங்களில் நலப்பணியாளரும், ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்,மாற்றுத்திறனாளிகளை கண்டறிவதும் அவர்களுக்கு தேவையான சேவைகளை செய்வதும் நலப்பணியாளருக்கும், ஒருங்கிணைப்பாளர்களின் பணிகளாகும்.

திருமண நிதி உதவி ரூ.50 ஆயிரம்

திருமண நிதி உதவி ரூ.50 ஆயிரம்

இளநிலைப் பட்டம் பெற்ற மாற்றுத் திறனாளிகளின் திருமண நிதி உதவியை ரூ 25 ஆயிரத்தில் இருந்து ரூ 50 ஆயிரமாக உயர்த்தியும், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கவும் முதலமை‌ச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் புதிய சலுகைகள்

தமிழக அரசின் புதிய சலுகைகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கும் வசதியுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையங்கள், 20 மாவட்டங்களில் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சமூக நலத் துறையின் சேவை இல்லங்கள் மற்றும் அரசு குழந்தைகள் காப்பகங்களில் தங்கி, 12ம் வகுப்பு படித்த, நூறு மாணவியருக்கு, உயர்கல்வி படிக்க நிதியுதவி வழங்கப்படும். இதன்படி, உணவு, சீருடை மற்றும் கல்விச் செலவுக்காக, பட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு, ஒரு ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாயும், தொழில் படிப்பு படிக்க, ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும்

Cash prize and assistance for Hearing impaired students

Cash prize and assistance for Hearing impaired students

Tamil Nadu government announced cash rewards for such meritorious students in government-run schools in Classes 10 and 12.”From this year onwards, students with speech and hearing disabilities in government-run schools who score the top three state ranks (in 12th Board exams) will be awarded cash prize of Rs 18,000, Rs 12,000

ஆரம்பநிலை பயிற்சி மையங்கள்

ஆரம்பநிலை பயிற்சி மையங்கள்

மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் 0-6 வயதுடைய 50 மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயன்பெறும் வகையில்,தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. மனவளர்ச்சி பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய பயிற்சிகள் மூலம் அவர்களின் செயல்திறன் அதிகரித்து, அவர்களை நல்வாழ்வு அடையச் செய்வதில் அவர்களின் பெற்றோர்/பாதுகாவலரைப் பயிற்றுவித்தல் மற்றும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி மற்றும் நல்வாழ்வு சேவைகளை அளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆரம்ப மையம்

ஆரம்ப மையம்

பிறந்தது முதல் வளர் பருவகுழந்தை வரை உள்ள செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆரம்பநிலை பாதிப்பைக் கண்டறிந்து அக்குழந்தைகள் 5வது வயது அடைவதற்குள் அவர்களுக்கு மொழி மற்றும் பேச்சு பயிற்சி வழங்கி அவர்களை சாதாரண பள்ளியில் சேர்த்து ஒருங்கிணைக்க வழிவகை செய்கிறது.

தேசிய அடையாள அட்டை

தேசிய அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல். மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல மையங்கள் மூலமாக வழங்கப்படுகிறது.

கடன் உதவி

கடன் உதவி

மாற்றுத் திறனாளிகளுக்கு 5லிருந்து 9 சதவிகித வட்டியில் கடனுதவி வழங்குதல். 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்; மாற்றுத் திறனாளிகளாக இருத்தல்வேண்டும்; தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும்.