success story Archives - Page 3 of 3 - enabled.in
கால்கள் இல்லா மனிதர் ஏறிய வெற்றிப் படிகள்

கால்கள் இல்லா மனிதர் ஏறிய வெற்றிப் படிகள்

எனக்கு மட்டும் ஏன் இப்படி? எதற்கு இப்படி? என்ற கேள்விகளையும் புகார்களையும் நாம் அன்றாடம் செய்து கொண்டிருக்கிறோம். எந்த வித உடல் குறையும் இல்லை, நாம் விரும்பியதை தேர்ந்தெடுக்க சுதந்திரம் உண்டு, இருந்தும் வாழ்வின் பாதி நேரங்களில் நமக்கு நிறைவே ஏற்படுவதில்லை. இந்த சிந்தனையை மாற்ற நாம் நிச்சயம் கற்றுகொள்ள வேண்டும், இந்த படங்கள் சொல்லும் பெரிய பாடத்தை!

It seems like a long journey -Chiraj Chouhan

It seems like a long journey -Chiraj Chouhan

Mr. Chauhan was among the survivors of the serial train blasts on July 11, 2006 which claimed over 180 lives. That day he had left for home early when a bomb exploded in the suburban local at Khar Road station. His spinal cord was damaged due to the explosion and some particles are still embedded in his chest and close to the trachea.

I have realized my dream -Muthuvel

I have realized my dream -Muthuvel

“My dream is to visit a big factory” was the innocent reply we got from Muthuvel when we asked him about his ambition in life. Muthuvel hails from an economically challenged rural family with very little education and no one to give directions to achieve his dream. He has a family of two sisters and ageing parents to support .He lost his hearing ability during his 11th year due to an accident and his school education was truncated and was listless in life.

சக்கர நாற்காலியில் சுழலும் வாள் வீராங்கனை!

சக்கர நாற்காலியில் சுழலும் வாள் வீராங்கனை!

சக்கர நாற்காலியில் சுழன்றபடி அந்த வளைக்கரம் அனாயசமாக வாளை வீச, பார்க்கும் நமக்கோ பிரமிப்பு. வாளின் வேகம் காற்றைக் கிழித்து கொண்டு பாய்ந்தது. வளைக்கரம் வாள் வீசுவது புதிதா என்ன? இல்லை. ஆனால் இந்த வளைக்கரத்துக்குச் சொந்தமான இந்திரா- மாற்றுத் திறனாளி என்பதுதான் புதிது. இவர் தேசிய, சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

சுஜிதா IAS – பார்வையற்ற மாணவி

சுஜிதா IAS – பார்வையற்ற மாணவி

“ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றிதாழாது உணற்று பவர்’ என்ற குறளின் கருத்துபடி தீவிர உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் விதி என்று கூறி தோல்வியை ஏற்காமல், அந்த விதியையே தோல்வியடையச் செய்யும்.

‘தில்’லானா தைரியாம்பாள் !

‘தில்’லானா தைரியாம்பாள் !

சுடிக்ஷ்னா வீரவள்ளியின் நாட்டியத்தைப் பார்த்து! இவரின் நாட்டியத்தை சிறப்பாக ரசிக்க வைக்கும் காரணங்கள் மூன்று. அவரது அர்ப்பணிப்பான நடனம்; சிகாகோவில் வாழும் இந்தியரான இவர், சர்வதேச அளவில் பல மேடைகள் கண்டிருந்தாலும்… இந்த பாரம்பரிய வேரைத் தேடி சென்னைக்கு ஓடி வந்திருக்கும் அவரின் ஆர்வம்; மூன்றாவதாக… சுடிக்ஷ்னா, ஒரு மாற்றுத்திறனாளி!

பயணம் செய்து பாடம் நடத்தும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்

பயணம் செய்து பாடம் நடத்தும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்

மாற்றுத்திறனாளி ஆசிரியரை மலைக்கிராம பள்ளியில் பணி நியமனம் செய்ததால், அவர் தினமும் 128 கி.மீ., தூரம் இருசக்கர வாகனத்தில் பயணித்தும், எட்டு கி.மீ., தூரம் மலைப்பாதையில் நடந்தும் பள்ளி சென்று மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தருகிறார்.

அரசு சொத்தை காப்பாற்ற போராடிய மாற்றுத்திறனாளி

அரசு சொத்தை காப்பாற்ற போராடிய மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளியான இவருக்கு, பிறவியிலிருந்தே நடக்க முடியாத நிலை. பெற்றோரும் செவித்திறன் குறைவுடையோர் ஆவர். கிராமப்பகுதியில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் வழக்கமான தொல்லைகள் இவருக்கும் இருந்தது.இதனால் இவரது பொழுதுகள் பெரும்பாலும் கிராமத்தை கடந்தே நகர்ந்து வந்தன. அருகில் உள்ள எழுதூர்பாட்டி கண்மாய் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் நிறைய கருவேலமரங்கள் வளர்ந்திருந்தன. இதுவே சப்பாணியின் பொழுதுபோக்கு மையமாக இருந்தது. இங்கு வரும் மயில்களை கண்டு ரசிப்பதும், விளையாடுவதுமாக பொழுதை கடத்தி வந்தார்.

ஊனம் ஒரு குறையில்லை சாதிக்கும் மாற்றுத்திறனாளி

ஊனம் ஒரு குறையில்லை சாதிக்கும் மாற்றுத்திறனாளி

பட்டப்படிப்பை முடித்து, அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு மத்தியில், தனது கால்களையே கைகளாக்கி, மொபைல்போன் ரிப்பேர் செய்யும் சுயதொழில் மூலம் சாதித்து காட்டி வருகிறார் மாற்றுத்திறனாளி ஒருவர். சென்னை, கிழக்கு கொளத்தூர் சாலையில் மொபைல்போன் சர்வீஸ் கடையை நடத்துபவர் கே.முகமது அசைன், 32. பிறவியிலேயே இரண்டு கைகள் இன்றி பிறந்ததால், மனம் தளராமல் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சேர்ந்து படித்தார்.